உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள தமிழகத்தை சேர்ந்த நீதியரசர் சதாசிவத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று, பின்னர் சென்னை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று அரசு வழக்கறிஞர், உயர் நீதிமன்ற நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர் என படிப்படியாக ஏற்றம் பெற்று இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் சதாசிவம்.
அவருக்கு தமிழக மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர் பணிக்காலத்தில் நீதித்துறைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்ற அவருக்கு என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications