Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேச்சழகியுடன் 'பழகிய' ரவீந்திரன், 'சைடில்' பழகிய அன்பு.. விடிய விடிய கட்டி அடித்த மக்கள்!!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே திருமணமான போலீஸ்காரர் ஒருவர், இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு படுக்கை அறை வரை போய் விட்டதால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் விடிய விடிய அந்தக் காவலரை கட்டி வைத்து அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்துப்பேட்டை அருகே உள்ளது பெத்தவேளாண்கோட்டை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 22 வயதான பேச்சழகி. இவர் ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு ஒரு காதலர் இருக்கிறார். அவரது பெயர் ரவீந்திரன். கல்லூரி படித்தபோதிலிருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர். ரவீந்திரன் தற்போது சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் பேச்சழகியின் கண் பார்வை அன்பு என்பவர் மீதும் விழுந்துள்ளது. அன்பு ஆயுதப் படை காவலர் ஆவார். அன்புக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். இருந்தாலும் பேச்சழகியின் பேச்சழகில் மயங்கி விழுந்த அவரால் எழுந்திருக்க முடியாமல் போனது. இது படுக்கை அறை வரைக்கும் போய் விட்டது.

இந்த மேட்டர் சென்னையிலிருந்தபடி பேச்சழகியை உருகி உருகி காதலித்த ரவீந்திரனுக்குத் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் பேச்சழகியை நேரில் சந்தித்து நிஜமா என்று கேட்டுள்ளார். இல்லை இது பொய், சுத்த வதந்தி என்று தெனாவெட்டாக மறுத்துள்ளார் பேச்சழகி.

ஆனாலும் விடாத ரவீந்திரன், நேரடியாக அன்புவையே பார்த்து கேட்க, அவர் ஆமாம், உண்மைதான் என்று கூறி விட்டார். மேலும் சொல்வது உண்மைஎன்பதை நேரடியாக நிரூபிப்பதாகவும் கூறுகிறார்.

இதையடுத்து இருவரும் இரவில் பேச்சழகி வீட்டுக்குச் சென்றனர். வெளியில் ரவீந்திரன் மறைவிடத்தில் இருந்து கொண்டார். அன்பு வீட்டுக்குள் போனார். சிறிது நேரத்தில் அன்புவும், பேச்சழகியும் படுக்கையில் உல்லாசத்தைத் தொடங்குகின்றனர். இதையெல்லாம் வெளியில் நின்று வேடிக்கை பார்த்த ரவீந்திரன் கொதிப்படைந்தார்.

கடும் கோபத்துடன் கீழே கிடந்த கட்டையை எடுத்து வேகமாக பேச்சழகியை தாக்கினார். அடி தாங்க முடியாமல் பேச்சழகி அலறவே ஊர் மக்கள் திரண்டு வந்தனர். பேச்சழகியைத் தாக்கிய ரவீந்திரன், அவருடன் உல்லாசமாக இருந்த அன்பு ஆகிய இருவரையும் பிடித்து கட்டி வைத்தனர். பின்னர் தாறுமாறாக தாக்கியுள்ளனர். விடிய விடிய இந்த அடி உதை விழுந்துள்ளது.

இன்று காலை போலீஸாருக்குத் தகவல் தெரியவே அவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். பின்னர் ஊர் மக்கள் கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+