என்.எல்.சி வேலை நிறுத்தம்: முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி... தீவிரமடையும் போராட்டம்
நெய்வேலி: என்.எல்.சி வேலை நிறுத்தம் தொடர்பாக புதுச்சேரியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளதை அடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி தொழிலாளர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முத்தரப்பு பேச்சுவார்த்தை புதுச்சேரியில் இன்று நண்பகலில் தொடங்கியது.

தொழிலாளர் நல உதவி ஆணையர் சிவராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்.எல்.சி சார்பில் பொது மேலாளர் மகேஷ்வர், 13 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டத்தை தீவிரப்படுத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த போராட்டம் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications