இன்னொரு தேமுதிக எம்.எல்.ஏ மீது பாய்ந்தது அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தேமுதிக எம்.எல்.ஏ வெங்கடேசன் மீ்து அவதூறு வழக்கு பாய்ந்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட அக்கட்சியின் பல்வேறு எம்.எல்.ஏக்கள் மீது முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதற்காக அவதூறு வழக்குகள் பாய்ந்துள்ளன.
இதனால் விஜயகாந்த் உள்ளிட்டோர் பல்வேறு கோர்ட்டுகளுக்கு நடையாய் நடந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் தேமுதிக எம்எல்ஏ வெங்கடேசன் மீதும் அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது.
வெங்கடேசன் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். ஒலக்கூரில் தேமுதிக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இவர் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து வெங்கடேசன் மீது ஒலக்கூர் காவல்நிலைய போலீசார் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications