இளவரசன் ஊரில் தேசிய எஸ்.சி கமிஷன் இயக்குநர் விசாரணை
Subscribe to Oneindia Tamil
ஜூலை 4ம் தேதி தர்மபுரி அரசுக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. இதனால் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த நிலையில் இந்த மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, தேசிய எஸ்.சி. எஸ்டி ஆணையத்தின் தமிழக இயக்குனர் வெங்கடேசன், ஆணையத்தின் உறுப்பினர் சிவண்ணா ஆகியோர் இன்று தர்மபுரிவந்துள்ளனர்.
தர்மபுரி வந்த அவர்கள் பின்னர் நத்தம் காலனிக்குச் சென்று ஊர் மக்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இளவரசனின் பெற்றோரையும் சந்தித்து நடந்ததைக் கேட்டறியவுள்ளனர்.
அதேபோல திவ்யாவின் ஊரான செல்லங்கொட்டாய் கிராமத்திற்கும் இக்குழு செல்லவுள்ளது. திவ்யா தரப்பையும் சந்தித்துப் பேசவுள்ளது.












Click it and Unblock the Notifications