திவ்யா விரும்பினால் இளவரசன் இறுதிச் சடங்கில் பங்கேற்கலாம்: ஹைகோர்ட்

காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலை மறு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று இளவரசனின் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே இளவரசனின் உடல் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக அங்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இளவரசனின் உறவினர்கள் அதிகம் பேர் இருப்பதால் இளவரசனின் இறுதிச் சடங்கில் அவரது மனைவி திவ்யா கலந்து கொள்ள இயலாமல் உள்ளது என்று வழக்கறிஞர் வைகை சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இளவரசன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பினால், அது குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் திவ்யா தரப்பினர் அளிக்க வேண்டும்.
மேலும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் நபர்கள் , மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுக்கலாம். அதற்குத் தகுந்த வகையில் மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாவட்ட ஆட்சியர், அங்குள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னையை கணக்கில் எடுத்துக் கொண்டு மனு குறித்து பரிசீலனை செய்து முடிவு செய்யலாம். அவ்வாறு அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் பட்சத்தில், அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications