இளவரசன் எழுதிய காதல் கடிதம் ஊடகங்களில் வெளியானது எப்படி? போலீஸ் அதிர்ச்சி!

கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் தன்னுடைய மரணத்திற்கு முன் தனது தந்தை இளங்கோ, காதல் மனைவி திவ்யா ஆகியோருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்தை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ரா கர்க் வெளியிட்டார்.
அந்தக் கடிதம் இரண்டு பகுதியாக எழுதப்பட்டு இருந்தது. ஒரு பகுதி திவ்யாவுக்கும், இன்னொரு பகுதி அவரது தந்தை இளங்கோவுக்கும் எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தில் உள்ளது இளவரசன் கையெழுத்து தானா என்பதை உறுதி செய்ய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவரது கையெழுத்தும் காதல் கடிதமும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆய்வு முடிவு வந்த பிறகு தான் அந்த கடிதத்தை எழுதியது இளவரசனா என்பது தெரிய வரும்.
ஒரு கடிதத்தில் 'தன்னுடைய சாவுக்கு நானே காரணம் என்றும், வேறு யாரும் காரணம் இல்லை' என்றும் அந்த கடிதத்தில் இளவரசன் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் உள்ளது இளவரசன் கையெழுத்து தானா என்று உறுதிப்படுத்த அவரது தந்தை இளங்கோ மற்றும் தாயார் கிருஷ்ணவேணி ஆகியோரிடம் கடிதத்தை காட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரத்தை தெரிவிக்க மறுத்த போலீசார் கடித நகலையும் வெளியிட மறுத்து விட்டனர். ஆனால் வேறு வழியில் கடித நகல் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி திவ்யாவிற்கு எழுதிய கடிதம் வெளியானதால் அதை படித்து அவர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே இளவரசன் சட்டைப் பையில் இருந்து கடிதத்தை எடுத்தவரே அதை நகல் எடுத்து விட்டு போலீசாரிடம் கொடுத்து இருக்கிறார். பின்னர் அதன் நகலை பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் கொடுத்து இருக்கிறார் எனவே அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications