For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவதூறு வழக்கு: தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் நேரில் ஆஜராக உத்தரவு!

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி, தொரப்பட்ட வழக்கில், தே.மு.தி.க. சட்ட மன்ற கொறடா சந்திரகுமார் வரும் ஆகஸ்ட் 12 ம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேதி ராஜபாளையம் ஹவகர் மைதானத்தில் கடந்த ஜனவரி மாதம் 6 ம் தே.மு.தி.க. சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அக் கட்சியின் சட்ட மன்ற கொறடா வி.சி.சந்திரகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக , வி.சி.சந்திரகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதி மன்றத்தில், அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 12 ம் தேதி நீதி மன்றத்தில் சந்திரகுமார் நேரில் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டார்.

அதிமுக கூட்டணியை விட்டு தேமுதிக பிரிந்து வந்ததில் இருந்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகின்றது. அதன் பலனாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அடுத்து அவரது மனைவி பிரேமலதா, அடுத்து அக் கட்சியின் சட்ட மன்ற கொறாடா சந்திரகுமார் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

English summary
The Srivilliputhur court on Tuesday issued summons to DMDK party korada V.C.Chandrakumar, to appear before the court on August 12 in connection with a defamation case filed by the state government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X