பொது இடத்தில் இளவரசனுக்கு அஞ்சலி: விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: இளவரசனுக்கு பொது இடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் லில்லியை மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில், இன்று மாலையோ அல்லது நாளையோ நடக்க இருக்கும் இளவரசனின் இறுதி அஞ்சலியை எதாவது ஒரு பொது இடத்தில் வைத்து நடத்த அனுமதிக்க வேண்டும். அப்போது தான் தலைவர்கள் உள்ளிட்ட சமூக நல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வசதியாக இருக்கும்.
அதேபோல் தலைவர்கள் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்றவகையில் 144 தடை உத்தரவை ஒரு நாள் மட்டும் தளர்த்தி அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.












Click it and Unblock the Notifications