உத்தரகாண்ட் வெள்ளம்: கால்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப் பட்ட 3 வயது சிறுமியின் பெயர் ‘ஜோதி’

Subscribe to Oneindia Tamil

Jothi
டேராடூன்: உத்தரகாண்ட் வெள்ளத்தில் தனிமையாக்கப் பட்டு கால்கள் உடைந்த நிலையில் மீட்கப் பட்ட குழந்தையைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட்டில் சென்ற மாதம் உண்டான நிலச்சரிவு மற்றும் பெரு வெள்ளத்தில் பல்லாயிரக்கணாக்கானோர் பாதிக்கப் பட்டனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரியாக கணக்கிடப் பட முடியவில்லை. காரணம் நாள்தோறும் ஆற்றில் பல சடலங்கள் ஆற்றில் அடித்து வரப்படுவதேயாகும்.

மீட்புப் படையியினரின் அயராதமுயற்சியினால், பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிருடன் மீட்கப் பட்டனர். அப்போது, 3 வயது சிறுமி ஒருத்தி அருகில் பொம்மையோடு கால்கள் உடைந்த நிலையில் மீட்கப்பட்டாள். ச்ய்திகளில் வெளியான அவளது பரிதாபமான நிலையைப் பார்த்து அவளைத் தத்தெடுக்க திரைத்துறையினர் உட்பட பலரும் போட்டியிட்டனர்.

அவளது உண்மையான குடும்பம் பற்றி எதுவும் தெரியாத நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாள் அச்சிறுமி. தற்போது, போலீசாரின் விசாரணையில் அவளது பெயர் ஜோதி என்பதும், அவள் உத்தரகாண்ட் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பாக்வான் கிராமத்தைச் சேர்ந்தவள் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், தாத்தா, பாட்டி வசம் வளர்ந்து வந்த ஜோதி, வெள்ளத்தில் தனது தாத்தா மற்ரும் பாட்டியை பறி கொடுத்திருப்பதும் கண்டறியப் பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+