டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு: டெல்லி நீதிமன்றம்
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான வழக்கில் 17வயது சிறுவன் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவனுக்கான தண்டனை விவரம் 25-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
நாட்டையே உலுக்கிய சம்பவம்தான் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் 17வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனும் அடக்கம்.
அவன் மீதான வழக்கு மட்டும் டெல்லியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி கீதாஞ்சலி கோயல் விசாரித்து வருகிறார். இன்று அவர் தீர்ப்பு அளிப்பார் என்று கூறப்பட்டதால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சிறுவன் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார். அவனுக்கான தண்டனை குறித்த விவரங்கள் வரும் 25-ந் தேதியன்று அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.












Click it and Unblock the Notifications