எனக்கு விதிக்கப்பட்ட தடை ஒரு சமூகத்திற்கே இழைக்கப்பட்ட அநீதி.. திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: இளவரசன் இறுதிச் சடங்கில் நான் கலந்து கொள்ள தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் விதித்துள்ள தடையானது, ஒரு சமூ்கத்திற்கே இழைக்கப்பட்ட அநீதியாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தடை உத்தரவை மீறி கலந்து கொள்வதா என்பது குறித்து கட்சியினருடன் ஆலோசனை செய்தபின், அதனை காலையில் தெரிவிப்பேன்.
இளவரசனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதியளிக்காதது வேதனை அளிக்கிறது. இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி அளிக்க அரசு முன்வரவேண்டும். அனுமதி அளிக்காதது எனக்கு மட்டுமல்ல, ஒரு சமூகத்துக்கே இழைக்கப்பட்ட அநீதியாகும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications