40 வயதான 'ஆட்டோ ராணி' ... 3 பேரால் பாலியல் பலாத்காரம்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னை வியாசர்பாடி பகுதியில் 40 வயதான பெண் ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அப்பெண்ணின் பெயர் முத்துலட்சுமி. ஆனால் இவரை அனைவரும் ஆட்டோ ராணி என்று அனைவரும் அழைப்பார்கள். இவர் தனது ஆட்டோவை, அதன் உரிமையாளர் நல்லமணியின் வீட்டுக்கு அருகே நிறுத்தியிரு்நதார்.
இந்த வீடு சத்தியமூர்த்தி நகரில் உள்ளது. ஆட்டோவை நிறுத்தி விட்டு அதிலேயே படுத்துத் தூங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் 3 பேர் அங்கு வந்து ஆட்டோ ராணியை எழுப்பியுள்ளனர். பின்னர் அவரது வாயைப் பொத்தி அருகே உள்ள இருட்டான இடத்திற்குத் தூக்கிச் சென்றனர். அங்கு வைத்து ஆட்டோ ராணியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அப்போது மணி 2 ஆகும். பின்னர் 3 பேரும் ராணியை அங்கேயே விட்டு விட்டு போய் விட்டனர். அலங்கோலமான நிலையில் இருந்த ராணி உதவி கேட்டு சப்தம் போட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ராணியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீஸாரும் விரைந்து வந்தனர்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் வியாசர்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications