கொலை முயற்சி வழக்கு: விஜயகாந்த்துக்கு மதுரை ஹைகோர்ட் முன் ஜாமீன்

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக ஜூலை 1ஆம் தேதி ஆஜராக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாகர்கோவில் வந்திருந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே தே.மு.தி.க. வழக்கறிஞர்களுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் ஞானசேகரன், கோட்டாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், விஜயகாந்த் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விஜயகாந்த் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி மாலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்துக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications