தமிழகத்துக்கு நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு!

டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்துக்கு மத்திய நீர்வளத்துறை செயலர் எஸ்.கே.தாஸ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுசேரி மாநில தலைமை செயலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு நிலைமை திருப்திகரமாக இருக்கிறது. இதனால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கான பங்கு நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று மேற்பார்வைக் குழு உத்தரவிட்டது என்று அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடக மாநில அணைகளில் திங்கள்கிழமையன்று 82 அடிக்கும் அதிகமாக நீர் இருப்பு இருக்கிறது. இதனால் தமிழகத்துக்கு ஜூலை மாதம் 34 டி.எம்.சி. நீரையும் ஆகஸ்ட் மாதம் 50 டி.எம்.சி. நீரையும் திறந்துவிட வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications