ஆபீஸுக்கு வந்தார் விஜயகாந்த்....!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைமைக் கழகத்திற்கு இன்று விஜயம் செய்தார் அக்கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் டபுள் ஆக்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்த்.
பிடிவாரண்ட் காரணமாக காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குக் கூட முடியாமல் பதுங்கியிருந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை அவருக்கு முன்ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

இதையடுத்து இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்திற்கு அவர் வந்தார்.
அங்கு மறைந்த பொதுச் செயலாளர் சொ.ராமு வசந்தனின் 4ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மச்சான் சுதீஷும் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications