நான் ஒன்னும் வேலை வெட்டி இல்லாம இல்ல: சும்மா எதையாவது கேட்காதீங்க- குஷ்பு
சென்னை: தான் ஒன்றும் வேலை இல்லாமல் இல்லை என்றும், அதனால் தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து விரைவில் குஷ்புவுக்கு கல்தா கொடுக்கப்படும் என்ற தகவல் காட்டுத்தீயாக பரவி வருகிறது. திமுக தலைவர் பதவி விவகாரத்தில் அக்கட்சியின் பொருளாளர் முக ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து அவர் அடி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஒரு செய்தி அது வதந்தி என்று தெரிந்தும் ஒருவர் அதை நான் மறுக்க வேண்டும் என்று கூறி எனக்கு போன் செய்தார். ஹலோ, யாரோ எதையோ கூறியது குறித்து என் நேரத்தை வீணடிக்க நான் ஒன்றும் வேலை இல்லாமல் இல்லை.
இது ஜனநாயக நாடு. மக்கள் சிந்திக்க, உளற, தங்கள் விருப்பப்படி எழுத அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அது குறித்து விளக்கம் கேட்டு என்னிடம் வராதீர்கள். நான் ஒரு பிசியான பெண்மணி என்று தெரிவித்துள்ளார்.