உத்தர்காண்ட் மாநிலத்தை சீரமைக்க ரூ13 ஆயிரம் கோடி தேவையாம்!
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: உத்தர்காண்ட் மாநிலத்தை சீரமைக்க ரூ13 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என்று அம்மாநில தலைமை செயலர் சுபாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
உத்தர்காண்ட் பெருவெள்ளத்தால் அம்மாநிலமே உருக்குலைந்து போனது. அம்மாநில மக்களுக்கு உதவவும் 300 கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ13 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. இதை மத்திய அரசுதான் கொடுத்து உதவ வேண்டும் என்று அம்மாநில தலைமை செயலர் சுபாஷ் குமார் கோரியுள்ளார்.

உத்தர்காண்ட் மாநிலத்தில்தான் இந்துக்களின் புனித யாத்திரை தலங்கள் உள்ளன. அவற்றால்தான் மாநில வருவாயும் அதிகரித்து வந்தது. தற்போதைய பேரழிவில் இந்த யாத்திரைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்று தெரியாத நிலையில் மாநில் அரசு கையை பிசைந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications