சென்னை பாஜக தலைமையகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்ட ரமேஷ் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அடுத்டுத்து இந்து முன்னணி, பாஜக தலைவர்கள் கொலை செய்ய்பட்டுள்ளதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
ரமேஷ் கொலையைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து அரசின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு கட்சி தலைமையகத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இத்தகவலை மாநகர போலீஸ் கமிஷனர் எஸ். ஜார்ஜ் பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications