குஜராத்தில் குறைந்து போன மக்களின் செலவிடும் சக்தி!
டெல்லி: குஜராத் மாநிலத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் மக்களின் செலவிடும் சக்தி குறைந்து போயுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் அனைத்து மாநில கிராமப் புற மற்றும் நகர்ப் புற மக்களின் செலவிடும் சக்தி தொடர்பாக நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைஷேசன் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. 1999-2000ம் ஆண்டு முதல் 2011-12ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னோடி மாநிலமாக சொல்லப்படுகிற குஜராத் பின் தங்கியே இருக்கிறது. தேசிய அளவிலான தனிநபர் நுகர்வு செலவு சதவீதத்தை விட மிகக் குறைவாகவே குஜராத்தின் தனிநபர் நுகர்வு செலவு இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆனால் ஆந்திர மாநிலம் வளர்ச்சி கண்டிருக்கிறது. 2000-ம் ஆண்டில் இம்மாநிலம் 11வது இடத்தில் இருந்தது. தற்போது கிராமப் புற பிரிவில் 5வது இடத்தையும் நகர்ப்புற பிரிவில் 6வது இடத்தையும் பிடித்திருக்கிறது.
தமிழகமோ நகர்ப்புற பிரிவில் 2வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு சென்றிருக்கிறது. இருப்பினும் கிராமப் புற பிரிவில் 6வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதாவது தமிழகத்தில் கிராமப் புற மக்களிடம் செலவிடும் சக்தி, நகர்ப்புற மக்களைவிட அதிகரித்திருக்கிறதாம்.
கிராமப் புற மக்களிடம் அதிகம் செலவிடும் சக்தி கொண்ட மாநிலங்களில் கேரளா, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவைதான் டாப் 5. அதிக செலவிடும் சக்தி கொண்ட நகர்ப்புற மக்கள் ஹரியானா, கேராளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் மாநிலங்களில்தானாம்!
நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைஷேசனின் இந்த புள்ளி விவரத்தை வைத்து இப்போது குஜராத்தை சாடியுள்ளது காங்கிரஸ். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சச்சின் பைலட், குஜராத் ஒளிர்கிறது என்ற மாய்மால பிரசாரத்தை இது அம்பலப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட பிரசாரம் மூலம் மோடி தம்மை விளம்பரப்படுத்திக் கொள்கிறார் என்றார்
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications