இப்படி எல்லாம் ஹோட்டல் பில் பிரிண்ட் அடிச்சா...!

மத்திய அரசு அண்மையில் ஏசி ஹோட்டல்களுக்கு கூடுதல் சேவை வரி விதித்திருந்தது. இதன் மீது தமது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் மும்பை பரேலில் கே.ஈ.எம். மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஹோட்டல் பில்லில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை இடம்பெறச் செய்திருந்தார் அதன் உரிமையாளர்.
அந்த பில்லில் "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, காமன்வெல்த் ஊழலில் பணத்தை விழுங்குவது அவசியமாம்... ஆனால் ஏசி ஹோட்டல்களில் சாப்பிடுவதுதான் சொகுசு வாழ்க்கையாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பில் வாசகங்கள் காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. நேற்று 30க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரசார் அந்த ஹோட்டலை முற்றுகையிட்டு உடனே மூடுமாறு வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் உருவானது. பின்னர் போலீசார் தலையிட்டனர். சர்ச்சைக்குரிய பில் வாசகங்களை நீக்கிவிடுவதாக ஹோட்டல் அதிபர் உறுதி அளித்ததால் காங்கிரசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications