உ.பியில் கவுரவக் கொலை: காதலை கைவிட மறுத்த தங்கையைச் சுட்டுக் கொன்ற அண்ணன் தலைமறைவு
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் காதலைக் கைவிட மறுத்ததால், குடும்ப கௌரவம் கருதி தங்கையை சுட்டுக் கொன்று ரகசியமாக புதைத்த அண்ணனை போலீசார் தேடி வருகின்ரனர்.
உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டம், கங்கேரு கிராமத்தை சேர்ந்த சய்மா என்ற 17 வயது பெண், அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை ரகசியமாக காதலித்து வந்துள்ளார். சங்மாவின் காதல் விவகாரம் அறிந்த அவரது குடும்பத்தினர் காதலர்களை எச்சரித்து வந்துள்ளனர்.
ஆனால், அவற்றைப் பொருட்படுத்தாத காதலர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சங்மாவின் அண்ணன் ராசாகான், நேற்று இது குறித்து தங்கையோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.
குடும்ப கௌரவத்திற்கு இழிவு உண்டாகும் வகையில் காதலித்து வரும் சங்மாவை, ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டுள்ளான் ராசாகான். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் சங்மா. ஊருக்கு தெரியா வண்ணம் சங்மாவின் பிணத்தை, வீட்டுத் தோட்டத்தில் புதைத்துள்ளனர் குடும்பத்தினர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, புதைக்கப்பட்ட சங்மாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ராசாகானை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications