டெல்லியில் மழை நீரை ஒரு வாரத்தில் வெளியேற்ற கோர்ட் கெடு!
டெல்லி: டெல்லியில் தொடர்ந்து தேங்கியுள்ள மழைநீரை ஒரு வார காலத்துக்குள் வெளியேற்ற வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர் தேங்கி உள்ளது. கால்வாய்கள் தூர்வாரப் படாததால் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்குகின்றன. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அகமத், விபு பக்ரு ஆகியோர் கொண்ட அமர்வு, தேங்கியுள்ள மழைநீரை 7 நாளில் வெளியேற்ற வேண்டும். கால் வாய்களை தூர்வார வேண்டும். போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் நாங்கள் வெள்ளத்தை கடந்து தான் நீதிமன்றத்துக்கு வருகிறோம். சில நீதிபதிகளின் அறைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆனால் இதுபற்றி தவறான புகைப்படங்களை அதிகாரிகள் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றுகின்றனர். உண்மையான புகைப்படங்களையே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications