அரச வாரிசு பிறந்த மகிழ்ச்சி : 22ந்தேதி பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி நாணயம் பரிசு அறிவிப்பு
லண்டன்: இங்கிலாந்து அரசப்பரம்பரையின் அடுத்த வாரிசான இளவரசர் வில்லியமின் மகன் பிறந்த தினத்தன்று இக்கிலாந்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்திய மதிப்பில் ரூ 2,500 மதிப்புள்ள வெள்ளி நாணயம் வழக்கப்பட இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தை ஆனா, பெண்ணா என உலகமே பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், கடந்த 22ம் தேதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் கேட்.
அரச குடும்பத்தின் வாரிசை வரவேற்க நாடெங்கிலும் விழாக்கோலம் பூண்டிருக்க, இங்கிலாந்து அரண்மனை மக்களுக்கோர் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. அதாவது, குட்டி இளவரசன் பிறந்த அன்று நாடெங்கிலும் பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி நாணயம் அன்பளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந்திய மதிப்பில் இந்த வெள்ளி நாணயங்கள் ஒவ்வொன்றும் சுமார் 2,500 மதிப்பானது. அரச முத்திரைப் பதிக்கப்பட்ட நீலம் அல்லது இளஞ்சிவப்பு பைகளில் வைத்து இந்த நாணயங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி நாணயத்தைப் பெற தகுதியான குழந்தைகளை உடையவர்கள், அதற்கான தகுந்த சான்றிதழ்களோடு ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளார்கள்.