ரூ2க்கு செக் கொடுத்த ஹரியானா அரசு: வெள்ள நிவாரணம் கேட்ட விவசாயிகள் ஆவேசம்
டெல்லி: டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் இழப்பீட்டு தொகைக்கான காசோலைகளில் ரூ2 முதல் ரூ6 வரை எழுதப் பட்டிருந்தது கண்டு விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர்.
ஹரியானா பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு கடும் வெள்ளப்போக்கு ஏற்பட்டது. இதில், அப்பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். அவர்களது பயிர்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் நிவாரண உதவி கேட்டு அரசிடம் முறையிட்டனர்.
விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்த ஹரியானா அரசு, விவசாயிகளுக்கு நிவாரண நிதிக்கான பணத்தை காசோலைகளாக வழங்கியது. மகிழ்ச்சியோடு நிவாரணா நிதி காசோலைகளைப் பெற்றுக் கொண்ட விவசாயிகள் தற்போது ஆத்திரமடைந்துள்ளனர்.
காரணம் அவர்களுக்கு வழங்கப் பட்ட காசோலைகளில் ரூ 2, ரூ 3 மற்றும் ரூ6 வரையிலான ரூபாய் நிவாரண நிதி எழுதப்பட்டிருந்தது தான். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் இந்தக் காசோலைகள் எங்களை அவமானப் படுத்துவது போல் உள்ளது எனக் கூறி அவற்றை நிராகரித்து விட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹரியானா அமைச்சர் புபைன்டர் சிங் ஹோடா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எம்.ஏல்.ஏ.கள் மற்றும் பிற அதிகாரிகள் இணைந்து இந்த தொகையினை வழங்கியுள்ளோம் எனவும் இந்த இழப்பீட்டுத் தொகையானது சரியான தொகையாகும் என பதிலுரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications