வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கை ரத்து செய்ய கோரும் மனு மீது அக்.22ல் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

SC deffers to hearing on Veerappan aides’ hanging case
டெல்லி: சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேரின் மனு மீது அக்டோபர் 22-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர் இதில் 21 போலீசார் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் 100க்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இறுதியாக ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டனர்.

தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதியிடம் 4 பேரும் கருணை மனுவை தாக்கல் செய்திருந்தனர். ஆனால் நீண்டகாலம் கிடப்பில் இருந்த இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 4 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 4 பேரையும் தூக்கிலிட இடைக்கால தடை விதித்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் 22--ந் தேதி 4 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+