உ.பி.யில்: 17 வயது மைத்துனியை கற்பழித்து, தீ வைத்து எரித்த நபர்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது அக்காவின் கணவரால் கற்பழிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ளது பில்கிராம். அந்த நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது அக்காவின் கணவரால் கற்பழிகக்ப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டார்.
ஆனால் சிறுமியின் அக்காவோ தனது கணவர் அவரை கிண்டல் செய்ததாகவும், தனது தங்கை தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிறுமியின் குடும்பத்தார் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறுமியை அவரது அக்காவின் கணவர் கற்பழித்து, எரித்துவிட்டார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications