ஞான் சத்தியமாய்ட்டு பறயுது சாரே... ஏதும் செஞ்சிட்டில்லா... ஸ்ரீசாந்த்
பெங்களூர்: நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சிக்கி கைதாகி தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள ஸ்ரீசாந்த் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக கைதாகி தற்போது ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்துள்ளார் ஸ்ரீசாந்த்.
இந்த நிலையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை, ரசிகர்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தி....

எந்தத் தவறும் செய்யவில்லை
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இதற்குக் காலம் பதில் சொல்லும் என்று நிச்சயம் நம்புகிறேன்.

காத்திருக்கப் போகிறேன்
தொடர்ந்து கடுமையாக பயிற்சி செய்யப் போகிறேன். காத்திருக்கப் போகிறேன். கடவுள் மகத்தானவர் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.

கேரளாவில் தீவிரப் பயிற்சி
தற்போது கேரளாவில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீசாந்த். இந்திய அணியில் தனக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார்.

இன்னொரு டிவிட்...!
ஸ்ரீசாந்த் விடுத்துள்ள இன்னொரு ட்விட்டில், எப்போதுமே நான் சிறந்ததையே கொடுத்துள்ளேன். அதைத் தொடருவேன். என் மீது அனைவரும் நம்பிக்கை வைத்திருங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.. தேங்க்ஸ் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.

'மெய்' வழியில் விடுபடுவாரா ஸ்ரீசாந்த்?
பிக்ஸிங் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்குள்ளான சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன், ஷில்பா ஷெட்டி வீட்டுக்காரர் ராஜ் குந்த்ரா ஆகியோர் அப்பாவிகள், நல்லவர்கள், ஒன்றுமே செய்யாதவர்கள் என பிசிசிஐ விசாரணைக் கமிட்டி ஏற்கனவே கூறியுள்ளது. அதே வழியில் ஸ்ரீசாந்த்தும் விடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications