ஞான் சத்தியமாய்ட்டு பறயுது சாரே... ஏதும் செஞ்சிட்டில்லா... ஸ்ரீசாந்த்
பெங்களூர்: நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சிக்கி கைதாகி தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள ஸ்ரீசாந்த் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக கைதாகி தற்போது ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்துள்ளார் ஸ்ரீசாந்த்.
இந்த நிலையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை, ரசிகர்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தி....

எந்தத் தவறும் செய்யவில்லை
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இதற்குக் காலம் பதில் சொல்லும் என்று நிச்சயம் நம்புகிறேன்.

காத்திருக்கப் போகிறேன்
தொடர்ந்து கடுமையாக பயிற்சி செய்யப் போகிறேன். காத்திருக்கப் போகிறேன். கடவுள் மகத்தானவர் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.

கேரளாவில் தீவிரப் பயிற்சி
தற்போது கேரளாவில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீசாந்த். இந்திய அணியில் தனக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார்.

இன்னொரு டிவிட்...!
ஸ்ரீசாந்த் விடுத்துள்ள இன்னொரு ட்விட்டில், எப்போதுமே நான் சிறந்ததையே கொடுத்துள்ளேன். அதைத் தொடருவேன். என் மீது அனைவரும் நம்பிக்கை வைத்திருங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.. தேங்க்ஸ் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.

'மெய்' வழியில் விடுபடுவாரா ஸ்ரீசாந்த்?
பிக்ஸிங் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்குள்ளான சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன், ஷில்பா ஷெட்டி வீட்டுக்காரர் ராஜ் குந்த்ரா ஆகியோர் அப்பாவிகள், நல்லவர்கள், ஒன்றுமே செய்யாதவர்கள் என பிசிசிஐ விசாரணைக் கமிட்டி ஏற்கனவே கூறியுள்ளது. அதே வழியில் ஸ்ரீசாந்த்தும் விடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications