மெட்ரோ ரயிலால் பழமையான லூத்தரன் சர்ச், வீடுகளில் விரிசல்.. மக்கள் கடும் அதிர்ச்சி

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பாதாள ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இது பலரது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது.
பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகளில் கட்டடப் பணியால் விரிசல் ஏற்பட்டு அவை இடியும் அபாயத்தை சந்தித்துள்ளன.
மேலும் மிகப் பழமையான இரண்டு சர்ச்சுகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. அதில் ஒன்று ஆற்காடு லூத்தரன் சர்ச். இது 1892ம் ஆண்டு கட்டப்பட்டது. அதேபோல பிராட்வேயில் உள்ள 169 ஆண்டு கால பழமை வாய்ந்த சிஎஸ்ஐ தமிழ் வெஸ்லி சர்ச். இரண்டு சர்ச்சுகளும் பெரும் விரிசல்களை சந்தித்துள்ளன.
இதையடுத்து இந்த சர்ச்சுகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் விரைந்து வந்து விரிசல்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த விரிசல்களைச் சரி செய்து தருவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications