ஸ்ரீசாந்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யும் டெல்லி போலீஸ்

ஐபிஎல் 6வது சீசனில் நடந்த போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் மும்பையில் வைத்து டெல்லி போலீசாரால் மே மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்டனர். திகார் சிறையில் அடைக்கப்பட்ட அந்த 3 பேரில் ஸ்ரீசாந்தும், அங்கீத் சவானும் கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால் அஜீத் சாண்டிலா மட்டும் ஜாமீன் கோராமல் சிறையிலேயே உள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீசாந்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி போலீசார் அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கின்றனர். ஐபில் போட்டிகள் நடந்து கொண்டிருந்தபோது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் 3 பேர் தவிர 11 தரகர்களும் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications