நிதிஷ் குமார் பிரதமராகத் தகுதியானவர்: சத்ருகன் சின்ஹா
Subscribe to Oneindia Tamil

இது குறித்து பீகாரைச் சேர்ந்த சத்ருகன் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நிதிஷ் குமார் பிரதமராகத் தகுதியானவர். நாட்டில் உள்ள சிறந்த மற்றும் வெற்றிகரமான முதல்வர்களில் அவரும் ஒருவர். ஒருவரை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுப்பது கட்சியும், தேர்தலில் கிடைக்கும் வாக்குகளும் தான். நிதிஷ் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய ஜனதாதளத்திற்கும் பாலமாக இருக்க முயற்சி செய்வார்.
நாங்கள் தற்போது ஒன்றாக இல்லை என்பதால் இனிமேல் ஒன்று சேரவே மாட்டோம் என்றில்லை. பீகார் முன்னேற்றத்திற்கு நிதிஷின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேர்தல் குழுவில் சத்ருகன் சின்ஹாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications