பஸ் ஸ்டாண்டில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற குடிகார ‘கண்டக்டர்’ கைது

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பஸ் ஸ்டாண்டில் வைத்து, மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவனைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

உத்தரபிரதேசம் பாலியா கிராமத்தைச் சேர்ந்தவர் மோடில்லாஹ் கான் (35). இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான கானால், அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரூபி கோபம் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டாராம்.

கான் கண்டக்டராகவும், அவரது மனைவி ரூபி தனியார் மருத்துவமனையில் உதவியாளராகவும் பணி புரிந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று, ரூபிக்கு போன் செய்த கான், தான் அவரைச் சந்திக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். அதனை நம்பி, காய்காட் பேருந்து நிலையத்திற்கு தனது மகனோடு வந்துள்ளார் ரூபி.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பஸ் ஸ்டாண்டிலேயே ரூபியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் கான். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரூபி பலியானார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாக தலைமறைவானார் கான்.

மகன் கண்ணெதிரே மனைவியைக் கொன்ற குற்றவாளியைப் பிடிப்பதற்காக இரு தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டது. அதில், அருகில் இருந்த பஸ் ஸ்டாண்ட் அருகே கான் கைது செய்யப் பட்டார்.

கொலைக்கானக் காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+