ஹைதராபாத் நிர்வாகத்தை தெலுங்கானா மாநிலம்தான் பார்த்துக்குமாம்...!
ஹைதராபாத்: ஹைதராபாத், இரு மாநிலங்களுக்கு 10 வருடத்திற்கு பொது தலைநகராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும் கூட, ஹைதராபாத் நகர நிர்வாகத்தை தெலுங்கானா மாநிலம்தான் பார்க்கும் என்று தெரிகிறது. மத்திய அரசு இப்படித்தான் யோசித்து வைத்துள்ளதாம்.
தெலுங்கானா பிராந்திய மக்களின் நீண்ட கால கோரிக்கையைத் தொடர்ந்து தற்போது ஆந்திராவை இரண்டாகப் பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்து விட்டது.
இதற்கு ஆந்திர மாநிலத்தின் இதர பகுதி மக்கள் கடும் எதிர்ப்பும், ஆட்சேபனையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் வாக்கு வங்கியை மனதில் கொண்டு தெலுங்கானா தனி மாநில முடிவை எடுத்துள்ளது காங்கிரஸ்.
பத்து வருடங்களுக்கு ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம் யார் பொறுப்பு...
இந்த பத்து வருட காலத்திற்கு ஹைதராபாத்தை யார் நிர்வகிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எல்லை தெலுங்கானாவில்தானே...
ஹைதராபாத் நகரானது, தெலுங்கானா பகுதியில்தான் உள்ளது. எனவே தெலுங்கானா மாநிலத்தின் வசம்தான் அதன் நிர்வாகம் இருக்கும். அதுதான் நடைமுறைக்கும் சரிவரும் என்று மத்திய அரசு கருதுகிறதாம்.

வாடகை வீட்டில் இருப்பது போல...
எனவே இந்த 10 வருட காலமும் ஆந்திராவின் தலைநகராக ஹைதராபாத் இருந்தாலும் கூட கிட்டத்தட்ட வாடகை வீட்டில் இருப்பது போலத்தான் அவர்களின் நிலை இருக்கும்.

புது தலைநகர் விரைவில்
10 வருடத்திற்குப் பிறகு நிச்சயம் ஹைதராபாத் தெலுங்கானாவுக்குத்தான் தனிப்பட்ட சொத்தாக மாறும். எனவே ஆந்திராவுக்கு தனித் தலைநகரை அதற்குள் உருவாக்கும் நடவடிக்கைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications