திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் குண்டு வெடிக்கும்... கடிதத்தால் பரபரப்பு
திருச்சி: திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆகஸ்ட் 3ம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என்று வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அலுவலகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஒரு இன்லேன்ட் கடிதம் வந்தது. அதில் ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தின் கீழ் வரும், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வெடிகுண்டு வைத்துள்ளோம். அது ஆகஸ்ட் 3ம் தேதி வெடிக்கும். இந்த குண்டுவெடிப்புக்கு ஏற்பாடு செய்தவர் கருணா இப்படிக்கு சுல்தான் என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் நேற்று இரவு கோவிலுக்கு விரைந்து சென்றனர். போலீஸ் கமிஷனர் அபினவ் குமார் முன்னிலையில் மோப்ப நாய்கள் சகிதம் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் வீரர்கள் தீவிர சோதனையில் இறங்கினர். ஆனால் தீவிர சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை.
எனவே கடிதம் புரளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த போலீஸ் சோதனையால் கோவிலில் பூஜைகள் பாதிக்கப்பட்டது. மேலும் கோவிலிலும் பரபரப்பு ஏற்பட்டது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருணா என்ற பெயருக்குரியவர் சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார். அவரிடமும் போலீஸார் விசாரித்தனர். ஆனால் அவர் மீது குற்றம் இருப்பதாக தெரியவில்லை. எனவே சைக்கில் ஸ்டாண்ட் ஒப்பந்தம் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஷமிகள் யாரேனும் இப்படி கடிதம் அனுப்பியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இருப்பினும் இந்தக் கடிதத்தை அலட்சியமாக எடுக்காமல் போலீஸார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications