பாமக முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்பட 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
சென்னை: பாமக முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
பாமக முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஸ்டாலின் முன்னிலையில், காஞ்சிபுரம் மாவட்ட பாமக மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி தலைமையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத் தலைவர் நிர்மல் குமார், மறைமலைநகர் நகரச் செயலர் கருணாநிதி, சித்தாமூர் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட துணை தலைவர் ரத்தினம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிளை, வார்டு பாமக நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.