குட்டி இளவரசரை பாதுகாக்கப் போகும் 50 ஆயுதம் ஏந்திய போலீசார்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மகன் ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயியை ஆயுதம் ஏந்திய 50 போலீசார் 24 மணிநேரமும் பாதுகாக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் அழகான ஆண் குழந்தையை கடந்த 22ம் தேதி பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் குழந்தை ஜார்ஜை பாதுகாக்க 50 போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்தி ஜார்ஜை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவிருக்கின்றனர். இளவரசர் ஜார்ஜ் தனது பெற்றோருடன் 19வது நூற்றாண்டில் கட்டப்பட்ட அன்மர் ஹாலில் பெரும்பாலான நேரத்தை செலவிடவிருக்கிறார்.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள போலீசார் குட்டி இளவரசரை பாதுகாப்பதுடன் பிற பணிகளிலும் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications