அமெரிக்கச் சிறையில் சிறுநீர் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபர் : ரு24,28,00,000 இழப்பீடு வழங்கிய அரசு
நியூயார்க்: போலீசாரின் அலட்சியத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபருக்கு சுமார் 25 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க அமெரிக்க அரசுக்கு நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் போதை தடுப்பு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். அதில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததாக டேனியேல் சாங் என்ற 25 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அந்த இளைஞரை நாலரை சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட 5 அடி உயர தனிமை சிறையில் அடைத்தனர். விசாரணாஇ முடிந்து வெளியில் சென்ற போலீச் அதிகாரிகள் அறைக்குள் டேனியலை வைத்துப் பூட்டியதை மறந்து போனார்கள்.
கிட்டத்தட 5 நாட்கள் ஜன்னல் வசதி கூட இல்லாத அந்த சின்ன அறைக்குள் அடை பட்டுக் கிடந்த டேனியல், உண்ண உணவும் ,குடிக்க நீரும் இன்றி அவதிப் பட்டுள்ளான். தாகத்திற்கு தனது சிறுநீரை தானே பருகியதால் அவனது சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன.
5வது நாள் எதேச்சையாக சிறைக்கதவைத் திறந்த போலீசார், அங்கு டேனியல் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்து விட்டனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டேனியல் 5 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்தான்.
போலீசாரின் அஜாக்கிரதையால் வாலிபர் பாதிக்கப்பட்ட சம்பவம் ஊடகங்களில் பிரசுரம் செய்யப்பட்டது. இதனைக் கண்டு மக்கள் போலீசார் மீது கடும் கோபமடைந்தனர். டேனியல் சார்பாக கோர்ட்டில் போலீசார் மீது வழக்கு தொடரப்பட்டது.
டேனியேல் சாங் தரப்பில் ஆஜராகி வாதாடிய வக்கீல் இது குறித்து கூறும்போது, 'எனது கட்சிக்காரருக்கு நேர்ந்த கொடுமை இந்த உலகத்தில் எவருக்குமே நேரக் கூடாது. அவருக்கு உரிய இழப்பீட்டை வழங்குமாறு அரசுக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும்' என்றார்.
வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு, டேனியேல் சாங்குக்கு 4.1 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கி கோர்ட்டுக்கு வெளியே அமெரிக்க அரசு சமரசம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது..
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications