For Daily Alerts
Just In
கர்நாடகா.. மீண்டும் எழுந்தது 'கொடவா' மாநில கோரிக்கை! நவ.1ல் 'டெல்லி சலோ' போராட்டம்!!
மைசூர்: கர்நாடக மாநிலத்தின் கொடவாக்கள் வசிக்கும் குடகு பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கொடவா தேசிய கவுன்சில் தலைவர் நாச்சப்பா வலியுறுத்தியுள்ளார்.
தெலுங்கானா தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம், அசாம், கர்நாடகா என பல மாநிலங்களையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கொடவா தேசிய கவுன்சில் தலைவர் நாச்சப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், குடகு பிரதேசத்தில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு புதிய மனு அளிப்போம். டெல்லியில் நவம்பர் 1-ந் தேதி இக்கோரிக்கையை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற பெயரில் போராட்டம் நடத்த உள்ளோம்.
தனி மாநிலத்துக்காக அமைதி வழியில் போராடி வரும் எங்களது கோரிக்கையை மத்திய அரசும் மாநில அரசும் புறக்கணிப்பது நியாயமற்றது என்றார்.
Comments
English summary
As the chorus for new states grew louder, a day after the Union government announced the creation of Telangana, the Kodavas of Karnataka disclosed plans to launch an agitation at the national level and explore legal options in support of their demand for an autonomous homeland.