செப்டம்பர் 21ம் தேதி இலங்கை வடக்கு மாகாணக் கவுன்சில்தேர்தல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு செப்டம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழர்களின் தாயகத்தை உள்ளடக்கிய பகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று மாலை மத்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடரப்பட்டது. அதே நாளில், மத்திய, வட மேற்கு மாகாணங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

நேற்றே வேட்பு மனு தாக்கல் முடிந்தது

நேற்றே வேட்பு மனு தாக்கல் முடிந்தது

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்தது.

என்ன முடிவு வரும்

என்ன முடிவு வரும்

இந்தத் தேர்தலை சர்வதேச அளவில் உள்ள தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளன.

மக்களுக்கு விமோச்சனம் கிடைக்குமா

மக்களுக்கு விமோச்சனம் கிடைக்குமா

இங்கு நடைபெறவுள்ள தேர்தலால் தமிழ் மக்களுக்கு விமோச்சனம் கிடைக்குமா என்ற அபிலாஷையும் எழுந்துள்ளது.

ராணுவத்தைக் குவித்து தேர்தல்

ராணுவத்தைக் குவித்து தேர்தல்

ஆனால் வடக்கு மாகாணத்தின் முழு பகுதிகளிலும் ராணுவத்தைக் குவித்து வைத்துள்ளது ராஜபக்சே அரசு. எனவே தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாக நடக்கும் என்பது சந்தேகமாகவே உள்ளது.

தமிழ் தேசிய கூட்டணி வெல்லுமா

தமிழ் தேசிய கூட்டணி வெல்லுமா

இத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணிக்கும், ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நிலவும். தமிழ் தேசிய கூட்டணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

டக்ளஸுக்கு முதல்வர் பதவி கிடையாது

டக்ளஸுக்கு முதல்வர் பதவி கிடையாது

இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பி்ல முதல்வர் வேட்பாளராக தற்போது அமைச்சராக ஒட்டிக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+