பிரதமர் மன்மோகன் சிங் தமிழக வருகை: பாதுகாப்பு வளையத்திற்குள் திருமயம்
Subscribe to Oneindia Tamil

திருமயத்தில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பி.ஹெச்.இ.எல். நிறுவனத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். இதற்காக பிரதமர் மன்மோகன் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருமயம் செல்கிறார். இதற்காக பி.ஹெச்.இ.எல். நிறுவனம் அருகே ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் எல்லையான கானாடுகாத்தான் தேசிய நெடுஞ்சாலையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே பிரதமரின் வருகைக்கு எதிர்த்து தெரிவித்து மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதால் போலீஸார் தயார் நிலையில் உள்ளனர். கடுமையான சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications