பணப்பிரச்சினை: நடுரோட்டில் தீக்குளிக்க முயற்சித்த ‘கோட்டீஸ்வரி’

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூரில் நடுரோட்டில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோவிலை சேர்ந்த கோட்டீஸ்வரி (வயது 36). நேற்று காலை எக்மோர் மாஜிஸ்திரேட் குடியிருப்பு அருகில் நின்று கொண்இருந்த இப்பெண், திடீரென தீக்குளிக்க முற்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரைக் காப்பாற்றி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரிடம் தனது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை தெரிவித்தார் கோடீஸ்வரி. அதாகப்பட்டது, தனது உறவினர் ஒருவர் தன்னை ஏமாற்றி ரூ5 லட்சம் வாங்கியதாகவும், திருப்பிக் கேட்டபோது தர மறுத்ததாகவும் அதனாலேயே மனமுடைந்து இத்தற்கொலை முயர்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

அவரை சமரசம் செய்த காவல் துறையினர், இது குறித்து செங்கல்பட்டு போலீசில் புகார் அளிக்கும் படி அவருக்கு ஆலோசனைகள் கூறினர். பின்னர் அவரது கணவர் வரவழைக்கப் பட்டு அவருடன் கோடீஸ்வரி பத்திரமாக அனுப்பி வைக்கப் பட்டார்.

பட்டப் பகலில் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+