தாக்குதல் அச்சம்: இஸ்லாமிய நாடுகளில் வரும் ஞாயிறு அமெரிக்க தூதரகங்களுக்கு விடுமுறை
வாஷிங்டன்: தாக்குதல் அச்சத்தின் காரணமாக வரும் ஞாயிற்அன்று இஸ்லாமிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
பொதுவாக அமெரிக்க தூதரகங்களுக்கு செவ்வாய்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக வரும் ஞாயிறன்று இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்க தூதரகக்களுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது அமெரிக்கா.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தகவல் அதிகாரியான மேரி ஹார்ப் கூறியதாவது, ‘தூதரக ஊழியர்கள் மற்றும் அங்கு வருகை தருவோரின் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்கத் தூதரகங்கள் வரும் ஞாயிறன்று மூடப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் எந்த அமைப்பினைச் சேர்ந்தவர்கள் மற்றும் எந்தெந்த நாட்டு அலுவலகங்களுக்கு அச்சுறுத்தல் விடப் பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications