கிரிமினல் எம்.எல்.ஏ, எம்.பி. தொடர்பான தீர்ப்பு: மத்திய அரசு மறு ஆய்வு மனு!
Subscribe to Oneindia Tamil

உச்சநீதிமன்றம் அண்மையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை அளித்திருந்தது. அதில், கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் எம்.எல்.ஏ, எம்.பி. பதவிகளில் நீடிக்கக் கூடாது, சிறையில் இருந்து தேர்தலில் போட்டியிட முடியாது என்று அதிரடியைக் கிளப்பி தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ, எம்.பிக்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பதவியில் நீடிப்பதற்கு வகை செய்யும் சட்டப் பிரிவையும் கூட நீக்கியிருந்தது. இதனால் கிரிமினல் எம்.எல்,ஏ, எம்.பிக்கள் அடிவயிறு கலங்கிப் போயினர்.
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications