கொலை மிரட்டலுக்குள்ளான அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ கார் விபத்தில் படுகாயம்... கொலை முயற்சியா?

செங்கம் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்குமாரும், அவரது மனைவி ரத்தினவள்ளியும் இருசக்கர வாகனத்தில் தங்கள் வீட்டில் இருந்து, நாவகரையில் தாங்கள் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் திண்டிவனம் சாலையில் உள்ள மாதா கோயில் அருகே சென்று கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு பின்னால் வந்த டாடா ஏஸ், இருசக்கர வாகனம் மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சுரேஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவும், தலையில் சிறிய காயமும் ஏற்பட்டது. அவரது மனைவிக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சுரேஷ்குமார் எம்.எல்.ஏ. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார்.
சுரேஷ்குமார் எம்.எல்.ஏ. தே.மு.தி.க.வில் இருந்து விலகி, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததில் இருந்து அவருக்கு கொலைமிரட்டல் வந்தது. இதையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இந்த நிலையில் அவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பிய ஓடிய டாடா ஏஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications