எல்லையில் பாகிஸ்தான் திடீர் தாக்குதல்- 5 இந்திய வீரர்கள் பலி-ஒருவர் காயம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று காலையும் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியது.

20 பேர் கொண்ட பாகிஸ்தான் ராணுவ சீருடை தரித்த குழுவினர் அதிகாலை 2 மணி அளவில் இந்திய நிலைகள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகி பலியாகி உள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளார்.
இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications