நிலக்கரி வழக்கு-சிபிஐக்கு உரிய ஆவணங்களை வழங்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐக்கு தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ தரப்பில் யாரை வேண்டுமானாலும் விசாரிக்க அனுமதி வழங்க முடியாது.. அரசு அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கொடுக்க தற்போது 3 மாத கால காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வேண்டுமானால் 1 மாதத்துக்குள் முடிவெடுக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று வாதிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களை அரசின் ஏன் அனுமதி பெற வேண்டும்? இந்த வழக்கில் உரிய ஆவணங்களை எந்த ஒரு தாமதமும் இல்லாமல் சிபிஐக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் ஆகஸ்ட் 25-ந் தேதி வரை நடத்தப்படும் விசாரணை நிலவர அறிக்கையை ஆகஸ்ட் 29-ந் தேதி தாக்கல் செய்யவும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+