மாயாவதி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தபோது சோனியா எங்கே போனார்?: சமாஜ்வாடி கட்சி கேள்வி
Subscribe to Oneindia Tamil

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பாலை சஸ்பெண்ட் செய்த விவகாரம் விஷ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் துர்காவுக்கு நீதி கிடைக்கும்படி பார்க்கக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியது சமாஜ்வாடி கட்சியினரை வெறுப்படைய வைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் கூறுகையில்,
சோனியா காங்கிரஸ் கட்சியின் தலைவர். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதலாம். ஆனால் மாநில அரசின் முடிவில் தலையிடுவது சரியல்ல. இதற்கு முன்பும் பல பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அப்பொழுதெல்லாம் ஒரு கடிதத்தையும் எழுதக் காணோம் என்றார்.












Click it and Unblock the Notifications