டெல்லி பலாத்கார வழக்கு குற்றவாளி அடைக்கப்பட்டுள்ள சிறார் காப்பகத்தில் திடீர் மோதல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான சிறுவன் அடைக்கப்பட்டிருக்கும் சிறார் காப்பகத்தில் திடீரென இன்று மோதல் நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் இயங்கி வரும் இந்த சிறார் காப்பகத்தில் இன்று காலை அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. உள்ளே தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே பலாத்கார வழக்கில் கைதான குற்றவாளிகள், திஹார் சிறையில் கொடூரமாக துன்புறுத்தலுக்குள்ளாகினர் என்ற புகார் எழுந்த நிலையில் சிறார் காப்பக சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மோதலை கட்டுப்படுத்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தாலும் விதிகளின் படி உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications