For Daily Alerts
Just In
கொடநாட்டில் இருந்து ஆக.12ல் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுதந்திரதின விழாவில் பங்கேற்பதற்காக ஆகஸ்ட் 12ம் தேதி கொடநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார்.
இந்தியாவின், 66வது சுதந்திர தினம், இம்மாதம், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில், தலைமைச் செயலகம் அமைந்துள்ள, புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில், முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றுகிறார்.
கோட்டை கொத்தளத்தில் முதல்வர் கொடியேற்றும் போது, எதிரில் உள்ள பகுதியில், பார்வையாளர்கள் அமருவதற்கான மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகர் முழுவதும், இரவு நேரங்களில் போலீசார் அதிகளவில், வாகன தணிக்கை, லாட்ஜ்கள், விடுதிகளில் சோதனை ஆகியவற்றிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
English summary
ADMK General Secretary J Jayalalithaa will be back in Chennai on August 12 for Independence day celebration.
Story first published: Thursday, August 8, 2013, 12:21 [IST]