அரசியல் லாபத்துக்காகவே தெலுங்கானா..: சாடுவது காங். முதல்வர் கிரண்குமார்!

Subscribe to Oneindia Tamil

Andhra CM warns Centre of more trouble due to Telangana formation
ஹைதராபாத்: அரசியல் லாபத்துக்காகவே காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவை உருவாக்கியிருப்பதாகவும் இதனால் பாதகமான விளைவுகளே ஏற்படும் என்றும் ஆந்திர மாநில முதல்வரான கிரண்குமார் ரெட்டி சொந்த கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மத்திய அரசின் தெலுங்கானா அறிவிப்புக்குப் பின்னர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா உருவானால் ஏற்படும் பிரச்சனைகளை பட்டியலிட்டார்.

குறிப்பாக கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஏற்கெனவே கர்நாடகத்துடன் சிக்கல் இருக்கிறது. தற்போது இந்த விவகாரம் மேலும் சிக்கலாகிவிடும் சூழல் இருக்கிறது என்றார். மேலும் கடலோர ஆந்திரா, ராயல்சீமாவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தும்போது வன்முறையில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபத்துக்காகவே தெலுங்கானாவை பிரித்துள்ளது என்றும் சொந்தக் கட்சியையே சாடினார் கிரண்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+